நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை : நோய் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் குழு அமைப்பு

நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை : நோய் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் குழு அமைப்பு
x
நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும்,  சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரிகள் ,புனேவில் உள்ள மத்திய அரசின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே, நிபா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்