குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி
x
17-வது மக்களவை தேர்தலில் 303 இடங்களைப் பெற்று பா.ஜ.க. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 16-வது மக்களவையை கலைக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராஜினாமா கடிதம் மற்றும் 16-வது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அளித்தார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், புதிய ஆட்சி அமையும் வரை பிரதமர் பதவியில் தொடருமாறு , நரேந்திர மோடியை அறிவுறுத்தி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்