சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள்  பறிமுதல்
x
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தின்  கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி தலைமையிலான போலீசார்,  கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பெங்களூரை சேர்ந்த  மூசா மற்றும் கயாஜ் அகமது ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் கம்பளிப்புரம் , ஹோஸ்கோட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்ததுடன், நயுஜ் என்கிற சர்வதேச கடத்தல்காரனையும் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்