சென்னை விமான நிலைய திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து

சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய  திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து
x
சென்னை விமான நிலைய  திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து 



சென்னை முகலிவாக்கம் அருகே விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையம்  உள்ளது. அங்கு நேற்றிரவு 12 மணியளவில் மின்கசிவு காரணமாக டிரான்ஸ்ம்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்த மரங்கள் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தன.  தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகள் உள்ள அப்பகுதியில்  தொடர்ந்து தீப்பிடித்து எரிந்ததால்  புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்