ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர்
x
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில், கந்தக அமில கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட அமிலக் கசிவை சரிசெய்யும் பணி இன்று தொடங்கும் என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்திருந்தார். அதன்படி, இன்று காலை சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றனர். அமில கிடங்கில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களில் 15 பேர் வரவழைக்கப்பட்டனர். அமில கசிவை சரி செய்வது குறித்து அதிகாரிகள், தொழிலாளர்கள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கந்தக அமில கசிவை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. இதனையொட்டி, ஸ்டெர்லைட் ஆலை முன், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்