சென்னையில் திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பல்வேறு பகுதிகளில், மாலை முதல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. எனினும், சென்னையில் மழை இல்லாமல், வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென மழை கொட்டியது. எழும்பூர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வேச்சேரி, தரமணி  உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை காரணமாக, கோடை வெப்பம் சற்று தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்