பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்
x
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், இவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.  சிறையில் உள்ள இந்த 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, சிறைத்தண்டனை விவரம், குடும்ப சூழல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இந்த கடிதத்தில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்