"கர்நாடகாவில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது காங்கிரஸ் கட்சி மட்டுமே" - விஜயதரணி

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தொழில்துறை வல்லுநர்கள் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கலந்துக் கொண்டார்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது காங்கிரஸ் கட்சி மட்டுமே - விஜயதரணி
x
தொழில் முனைவோர் சாம் பிட்ரோடா தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துக் கொண்டு மாநிலத்தில் தொழில்துறைக்கான வளர்ச்சி குறித்து விவாதித்தனர். இதில்  கலந்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பின்னர் தந்தி டி.வி-க்கு  பிரத்தியேக பேட்டி அளித்தார். அப்போது, கர்நாடக காங்கிரஸ் அரசில்தான் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கர்நாடக மாநில தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் விஜயதரணி காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்