இந்தியா

கர்நாடகா சிவில் சர்வீஸ் தேர்வு - தாலியை கழட்ட சொன்ன அதிகாரிகள்

தந்தி டிவி

கார்நாடக மாநிலத்தில் குடிமைத் தேர்வு எழுதச் சென்ற திருமணமான பெண்களின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்ற தேர்வறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றன. தேர்வு எழுதச் சென்ற திருமணமான இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள், கடும் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக மாநில பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தேர்வறை கட்டுப்பாடு என்ற பெயரில், திருமணமான இந்து பெண்களின் தாலி, கருகமணி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஹிஜாப் பெண்களை சோதித்து அனுப்பியது போல, இந்து பெண்களையும் சோதித்து அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்