Typhoon Kalmaegi Philippines | கொடூரமாக தாக்கிய கால்மேகி புயல் - சிதைந்த முக்கிய நாடு
மீண்டும் மீண்டும் புயல் தாக்குதலுக்கு ஆளாகி வரும் பிலிப்பைன்ஸை ‘கால்மேகி' என்ற புயல் தாக்கியதில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் தாக்குதலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கியதில் இதுவரை 26 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதிகளில் கனமழையானது தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.