Chile Fire Accident | "திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ" - 21 பேர் உடல் கருகி துடிதுடித்து பலியான கொடூரம்

Update: 2026-01-24 15:51 GMT

Chile Fire Accident | "திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ" - 21 பேர் உடல் கருகி துடிதுடித்து பலியான கொடூரம்

தென் அமெரிக்க நாடான சிலியின் பயோ பயோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக, 39 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் திட்டமிட்டு தீ வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளை அகற்றும் பணியும், சுத்தப்படுத்தும் பணியும் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த காட்டுத் தீ சம்பவங்களில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்