Madurai | கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு நாடகம் போட்ட இளைஞர் - மதுரையில் வெறிச்செயல்
மதுரை அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் குருவித்துறையை சேர்ந்த ராஜபாண்டி என்பது தெரியவந்தது. இவர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிக்கொண்டு, திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க கொண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.