விருதுநகரில் கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 5 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட அஞ்சலக உதவியாளரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் அமர்நாத். இவர் அருப்புக்கோட்டை தபால் அலுவலகத்தில் அயற்பணியாக பணிபுரிந்து வந்தபோது, அஞ்சலக பணம் 5 கோடி ரூபாயை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2024ம் ஆண்டு அமர்நாத் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் சேதுராஜபுரம், பந்தல்குடி பைப்பாஸ் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த அமர்நாத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4.6 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.