திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பழனி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பயணித்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அலங்கியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.