தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தன் மகளின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதாக கூறி, தந்தை, மகள் இருவரும் காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுமனையை சேர்ந்த 70 வயதான முகமது கனி சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்த நிலையில், எந்த குற்றமும் செய்யாத அவரது மகள் 40 வயதான சித்தீகா மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தந்தை, மகள் இருவரும் பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.