Thanthondrimalai Perumal | தென் திருப்பதியாக போற்றப்படும் கோயிலில் கும்பாபிஷேகம் - ஒலித்த `தமிழ்’
கரூர் தான்தோன்றிமலை கோயில் கும்பாபிஷேகம் - தமிழில் பாசுரங்கள்
கரூரில் தென்திருப்பதியாக போற்றப்படும் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கிணங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்கு முன், சமஸ்கிருத மந்திரங்களும், அதைத் தொடர்ந்து சுமார் ஐந்து நிமிடங்கள் தமிழ் பாசுரங்களும் ஓதப்பட்டன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.