Vellore | அரசு பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் - தர்ம அடி வாங்கிய இளைஞர்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை பயணிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தவுடன் அந்த இளைஞரை போலீசில் பயணிகள் ஒப்படைத்தனர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.