வைகாசி பிரம்மோற்சவம் - வரதராஜ பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ முதல் நாள் மாலை உற்சவம் நடைபெற்றது. இதில் மஞ்சள் பட்டு உடுத்தி, சிம்ம வாகனத்தில், வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.