திசையன்விளை அருகே இரண்டரை வயது குழந்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் பிருந்தா. இவரது கணவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், இவருடைய இரண்டரை வயது மகள் மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையின் வாய் பகுதிகளில் காயம் இருந்த நிலையில், தாய் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதன் காரணமாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.