வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றன. இதனால் கோவில் முன்புள்ள சண்முக விலாசம் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.