உள்ளவர்களை அலறவிட்ட செய்தி.. புதுவையில் நடந்துருச்சி.. எச்சரிக்கையா இருங்க
புதுச்சேரியில் தனியார் வங்கி பெயரில் போலி லிங்க் அனுப்பி, 4 பேரிடம் 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்தது. அதனை வெங்கடேசன் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி விவரங்களை பதிவிட்டார். சிறிது நேரத்தில் வெங்கடேசன் வங்கி கணக்கிலிருந்த 23,000 ரூபாயை மோசடி கும்பல் எடுத்துள்ளது.
இதேபோல், ரெயின்போ நகர் விக்னேஷ் விஷ்ணு என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 27,000, புதுச்சேரி, கிழக்கு சன்னதி வீதி கிருஷ்ணகுமாரிடம் 19,500, மற்றும் ராஜேஷிடம் 10,100 ரூபாயை மோசடி ஈடுபட்டுள்ளனர் இது குறித்து புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.