பற்றி எரிந்த பச்சை மரம்.. தீயை பாய்ச்சிய வானம்
உளுந்தூர்பேட்டை அருகே கனமழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி தென்னை மரம் எரியும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஷேக் உசேன் பேட்டை கிராமத்தில், மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரியத் துவங்கியது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.