தந்திடிவி செய்தி எதிரொலி - நெல்லையில் கரடியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு

Update: 2025-04-28 05:32 GMT

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் கடந்த மாதம் சுற்றித்திரிந்த கரடியை கடந்த 30 -ந் தேதி அம்பை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். இந்நிலையில், சில நாட்களாக கோவில் வளாகத்தில் மற்றொரு கரடி மீண்டும் சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து கரடியை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இது தொட‌ர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானது. இதனையடுத்து, கரடியை பிடிக்க வனத்துறையினர் கோவில் வளாகத்தில் கூண்டு வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்