"reverse எடு,reverse எடுஅதுபாட்டுக்கு போயிடும்" உயிர் பயத்தை காட்டிய யானைக்கு bye... சொன்ன இளைஞர்கள்
நள்ளிரவில் கார்களை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது . இந்நிலையில் ஆசனூர் அருகே ஒரு காட்டு யானை சாலையில் சென்ற கார் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து துரத்தியது. அப்போது காரில் சென்ற பயணிகள் அச்சமடைந்ததோடு கணேசா வழி விடு என்றும், யானையை கடந்து செல்லும்போது குட்பை என நன்றி சொல்லிவிட்டும் சென்றனர். சாலையில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளன