மாட்டின் மீது மோதி பைக்கோடு தூக்கிவீசப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே பலி -பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2022-07-26 14:21 GMT

நத்தம் அருகே இருசக்கர வாகனம் மாட்டின்மீது மோதியதில், டூவிலர் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் சொறிப்பாறைபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. டூவிலர் மெக்கானிக்கான இவரின் இருசக்கர வாகனம், மூன்று லாந்தர் பகுதியில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்