குன்னூரில் மலை ரயில் செல்லும் தண்டவாளத்தில் ரீல்ஸ் பிரியர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஒட்டி வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து அந்த இளைஞர் டூவீலரை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..