Ramanathapuram News | "மலை போல எங்க ஆலிம நம்புனோம்.. ஆனா அவரு இப்படி பண்ணுவாருனு எதிர்பார்க்கல"...
அடகு வைத்த150 சவரன் நகைகளுடன் இமாம் தப்பி ஓடியதாக இஸ்லாமிய பெண்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் பகுதியை சேர்ந்த பள்ளிவாசலின் இமாம் ஆன அபுதாஹீர் என்பவர், அடகு வைத்த 150 சவரன் தங்க நகைகளுடன் தப்பி ஓடி விட்டதாக பெண்கள் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளனர். வட்டியில்லா கடன் தருகிறாரே என்று அவ்வப்போது நகைகளை கொடுத்து பணம் பெற்று வந்தோம், ஆனால் பணத்தை செலுத்திய பிறகும் நகைகளை திருப்பி தராமல் ஊரை விட்டு ஓடி விட்டார் என கிராமத்தை சேர்ந்த பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.