தமிழ் சுவடியியல் வகுப்பு நடத்தும் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ் சுவடியியல் வகுப்பு நடத்திவரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறன் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரின் பாராட்டை அங்கீகாரமாக கருதுவதாகவும், இந்த சுவடிகள் பயிற்றுவிக்கும் பணியை தொடர்ந்து வழங்கி வருவேன் என்றும் அவர் கூறினார்.