பங்குனி உத்திர விழா.. திணறும் பழனி கிரிவல பாதை.. வானை கிழிக்கும் "அரோகரா.."
பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் பழனி கிரிவல பாதையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிப்புச் சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மலையடிவாரத்தில் மேளதாளத்துடன் காவடிகளை சிவந்து வரும் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். மாலை 4:30 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது