தென்காசி நகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை பெய்தது. தென்காசி, மேலகரம், குற்றாலம், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.