ஆர்ப்பரிக்கும் கும்பக்கரை அருவி | 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும் மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.