தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய பலத்த மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சங்கரன்கோவில், கரிவலம் , குருவிகுளம், குருக்கள்பட்டி, இருமன்குளம், நடுவக்குறிச்சி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக இடிமின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.