கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நகராட்சித் தலைவர், நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளருக்கு குப்பைகளை பரிசாக வழங்கி நூதன முறையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,குப்பைகள் 80 சதவீதத்திற்கு மேல் அகற்றப்பட்டு வருவதாகவும் ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் குப்பைகளை போட்டு விட்டு செல்வதாகவும் குப்பை கொட்டுபவர்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு இரண்டாயிரத்து 500 சன்மானம் கொடுப்பதாகவும் நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் தெரிவித்துள்ளார்.