தூத்துக்குடியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மது போதையில் பொது மருத்துவர் கண்ணன் என்பவர் ஆண்கள் பிரிவில் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீட்டியோ வெளியான நிலையில் மருத்துவர் கண்ணனுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதற்கு உரிய விளக்கம் அளிக்காத நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவர் கண்ணனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.