கொடைக்கானலில் பனிக்கட்டி மழை! சுற்றுலா பயணிகளுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் மழை காரணமாக அப்பகுதியில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.