வேரோடு பிடுங்கப்பட்ட 150 ஆண்டு மரம் ``இதுல எனக்கு தொட்டில் கட்டுனாங்க..`` - கலங்கி பேசிய மூதாட்டி
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருந்த பிரம்மாண்ட ஆலமரம் வேறு இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை தனியார் அமைப்பினர் வேரோடு பிடிங்கி ராட்சத வாகனத்தின் மூலம் அருகில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மறு நடவு செய்தனர். அப்போது பிடுங்கப்பட்ட ஆலமரத்தடியில் வளர்ந்து அங்கேயே கடை நடத்தி வந்த மூதாட்டி மரத்தை எடுத்துச் செல்லும்போது வேதனை தெரிவித்தார்.