வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி - மனம் மாறி அதிகாரிகள் எடுத்த முடிவு
கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மூதாட்டி - மனம் இறங்கிய அதிகாரிகள்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது மூதாட்டி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்ததால் மனம் இறங்கிய அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய ஒருவாரம் அவகாசம் அளித்துச் சென்றனர்.