சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஆய்வகத்தில் கண்ணாடி குடுவை வெடித்து இரு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிராக்டிகல் வகுப்பில் கண்ணாடி குடுவை வெடித்ததில், கண்ணாடி துகள்கள் நித்திஷ், சூர்யா ஆகியோரின் முகம் மற்றும் கழுத்தில் பட்டதால் காயமடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்கு ஆழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.