தீபாவளி சீட்டு நடத்தி மோசடி | கணவருடன் சேர்ந்து கம்பி நீட்டிய பெண்

Update: 2025-05-03 07:18 GMT

திருவள்ளூரில் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தை சேர்ந்த பவானி, கணவர் சங்கருடன் சேர்ந்து, தீபாவளி சீட்டு நடத்தி உள்ளார். இதில் சுமார் 78 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்த அவர், கணவருடன் தலைமறைவான நிலையில், இதுகுறித்து ஆவடி மாநகர காவல் ஆணையரகம் குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த பவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரது கணவர் சங்கரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்