ஒசூர் அருகே காட்டிநாயக்கன் தொட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 22 மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து உடல் உபாதை ஏற்பட்ட மாணவர்கள் ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.