சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட நுழைவு வாயில் அருகே, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகைகள் பொருத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் காற்றில் உள்ள தூசுகள், தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.