குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ரிதன்யா பெற்றோர் கோரிக்கை
அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தர வேண்டுமென அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் புது மணப்பெண் ரிதன்யா உயிரை மாய்த்து கொண்ட விவகாரத்தில் மூன்றாவது குற்றவாளியான மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய ரிதன்யாவின் பெற்றோர் அண்ணாதுரை மற்றும் ஜெயசுதா ஆகியோர் கைது நடவடிக்கையுடன் இல்லாமல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தர அரசு மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.