அகமதாபாத் விமான விபத்து - "இந்தியாவிலேயே டி-கோடிங்.." - அதிரடி அறிவிப்பு

Update: 2025-07-21 13:15 GMT

Ahmedabad Flight Crash | அகமதாபாத் விமான விபத்து - "இந்தியாவிலேயே டி-கோடிங்.." - ராம் மோகன் நாயுடு அதிரடி அறிவிப்பு

அகமதாபாத் விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டியின் தரவுகள் இந்தியாவிலேயெ டி-கோடிங் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விமான விபத்துக்கள் புலனாய்வு பணியகமான AAIB விசாரணையை வெளிப்படையான முறையில் மேற்கொண்டு வருவதாக கூறினார். முழு விவரம் அறிய அதன் இறுதி அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்