#JUSTIN || சென்னையில் பெண்களிடம் அசிங்கம் செய்த இளைஞர் - Gpay வைத்து தட்டி தூக்கிய போலீசார்

Update: 2025-05-01 12:15 GMT

பெண்களிடம் அத்துமீறல் - ஜிபே மூலம் சிக்கிய நபர்/தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது/சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் /சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர்/ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்‌ஷன் ஏஜெண்டை கைது செய்த போலீசார்/கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைப்பு/கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்