Seeman "பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும்" - சீமான்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை குறைக்கச் சொல்லிக் கேட்பது இயல்புதான் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குடும்பம் உள்ளது என்றும் தெரிவித்தார்.