"G20... ரூ.2700 கோடி..." - அமைச்சர் உதயநிதி பரபரப்பு ட்வீட்

Update: 2023-09-10 12:11 GMT

2700 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்...

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுவதாகவும், 2,700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குவதாகவும் விமர்சனம் செய்துள்ளார். ஊழலை மறைக்க மொழி, மதம், கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி என கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்