துருக்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..