பெங்களூரு புறநகர் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தேவனஹல்லி அருகே அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி எதிரே வந்த கர்நாடக அரசு பேருந்து மீதும் மோதியது. இதில் கார் அப்பளம் போல நசுங்கிய நிலையில், பேருந்தில் பயணித்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது.