Jammu Kashmir | லடாக்கில் வெடித்த வன்முறையில் பறிபோன உயிர்கள் - அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

Update: 2025-09-25 02:11 GMT

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நீண்ட காலமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் நிலவியது. இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, லே நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்