நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவு துறை அமைச்சரும் தெரிவித்தனர். இந்நிலையில், மருத்துவ பொருட்கள், போர்வைகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவை அடங்கிய 21 டன் நிவாரண பொருட்களை விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரத்தை சென்றடைந்தது.